பதிவர்களின் குசும்பு:::

On Thursday, April 28, 2011 11 comments


நான் படித்த வரை , தெரிந்தவரை பதிவு போடும் போதும் , கருத்து போடும் போதும் நடக்கும் சில விசியங்களை
சொல்கிறேன்....(இது சாதரணமாக  எடுத்து கொள்ள வேண்டும் )

1 .உசுர குடுத்து  ரொம்ப யோச்ச்சு ஒரு பெரிய கவிதைய எழுதி இருப்பார்கள் .
அத முழுசா கூட படுச்சு பார்காம, "NICE ","அருமை ","பிரமாதம் " ,"தொடருங்கள் ""நல்ல எழுத்துகள் " ன்னு உடால் விடறது.....(சும்மா இருதவாவது அவரு வேற வேலைய  பார்ப்பாரு  )

2 .ஒரு நூறு  லைன் எழுதி இருப்பார் நம்ம பதிவர் , அத என்னமோ முழுசா  படுச்ச மாறி ,எங்கையோ  ஒரு ஒரு ரண்டு லைன்'எ
எடுத்து காபி-பேஸ்ட் பண்ணி "என்னை கவர்ந்தது  ன்னு " பீல்டு-அப்  பண்றது ...

3 . எங்கையோ  இருந்து ஒரு பெரிய தகவல, திரட்டி (அ ) சிந்தனைய பெருசா சொல்லி இருப்பாங்க  நம்ம பதிவர் ..., அத நல்ல படுச்சுட்டு
ஒரு கமென்ட் கூட போடாம ஓடிருவாங்க ....(இச்டடுஸ் ல பார்த்த நிறைய   பேர் படுச்சு இருப்பாங்க )


4 .ஆனா பாருங்க வெட்டியா ஒரு பதிவு போட்டு இருப்பாங்க நம்ம பதிவர் , அதுக்கு மாஞ்சு மாஞ்சு  வந்து  ன்னு கமண்டு போடறது ... ..

5 .இது தான் ஹை லைட்டே தொடர் கதைய எழுதும் போது என்னமோ எல்லாத்தையும் படுச்ச மாறி "அடுத்த பதிவு எப்போ ?
அடுத்த பதிவு எப்போ ன்னு " சும்மா இருந்த சங்க நோண்டி கேடுகிறது ..........


6 .தேடி போய் பாலோவர்   மட்டும் , போட்டுட்டு , என்னமோ என்னமோ ஒரு பதிவு விடாம படிக்கிற மாறி
கதை விடுவது ..,..........................    


7 .ஈழ   தமிழ்  படுகொலை (அ) ஏதேனும்  விரும்பதகாத சம்பவங்களை  எழுதி இருப்பார்கள் ..அதுக்கு போய் "LIKES" போடுவது  ....>>>

வெளியிடப்பட்ட நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

On Tuesday, April 26, 2011 4 comments

 இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

-இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

பதிவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட கோபம் .

On 6 comments

சிரிக்கணுமா? இந்த படங்களை பாருங்க!

On Friday, December 17, 2010 7 comments














































 

இந்த புகை படங்களைப்பார்த்து வயிறு வலிக்க சிரிங்க !

On Wednesday, December 1, 2010 5 comments

சிரிங்க வயிறு புன்னாக சிரிங்க !
                                                                                                        
































இந்த காமிடி புகைப்படத்தை நீங்களும் பாருங்க !

On Monday, November 22, 2010 12 comments


 



























நன்றி பாலா அண்ணா!

டாக்டர் தம்பி விஜய் 3 இடியட்டில்

On Wednesday, November 17, 2010 6 comments

டாக்டர் தம்பி விஜய் 3 இடியட்டில் !
3 முட்டாள் படமும் டாக்டர் தம்பியின் இயக்கமும் !
கேள்வி  : நீங்கள்  இந்த படக்கதை பற்றி மணம் திறக்கிறார் டாக்டர் தம்பி !
டாக்டர் தம்பி :
 இது என் சொந்தப்படம்!..
கதையின்  கரு முட்டாள்களைப்பற்றி !..   அந்த 3 முட்டாள்களுள்  நானும் ஒருவன், மத்த இரண்டு முட்டாள்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் ! நான் தான் முதல் முட்டாள் !

இந்த படத்தில் 6 pack மாறி waterbag என்னும் புதிய படைப்பு, அதற்காக நான் பயிற்சி  எடுத்தது   !

இண்ட்ரோ சீன்ல நான் சைக்கிள் ல வருவேன் !. அப்போ ஹெலிகாப்டர்ல ஒரு பொண்ணுக்கு 5 பேர் ரேப்  பண்ணா ட்ரை பண்ணுவாங்க !. நான் அவங்கள காப்பாத்தி மறுபடியும் சைக்கிள்ள வந்து இறங்கின உடன் ஒரு பாட்டு!!
    
  "நான் பேசின நாத்தம் தாங்காம ஓடிபோயிர்வ,
நாலு நாள் தூங்க மாட்ட,
என்கிட்டே பேசிப்பாரு 
 வீடுபோய் சேரமாட்ட !!"
  

இந்த படத்துல வித்தியாசமா நான் ஒரு ரோல் பண்றேன் !
 அதற்க்கு ஒரு பெரிய காஸ்டுயும் டிசைன் !
இது தான் அந்த காஸ்டுயும் டிசைன்!..

இந்த படத்தோட வில்லன் ஒரு மிகப்பெரிய முட்டாள் !.. யார் உண்மையலே முட்டாள் என்பது தான் படத்தோட  கதை !

இந்த படத்தின் வில்லன் இவர் தான் ! பெயரு   (குல்லா)

இந்த படத்தோட கதாநாயகி தமிழ் தெரியாது  . மும்பை கதாநாயகி , புது மாதரியாக இவரை புக் செய்துள்ளேன் !
இந்த படத்தோட கதாநாயகி ! பெயரு பக்மா !



இந்த படத்தில் என்னுடன் நடிக்கும் இன்னொரு முட்டாள் இவர் தான் !.. இன்னும் ஒரு முட்டாளை தேடிக்கொண்டு இருக்கிறேன் !
 பெயரு (கருங்கரடி (எ ) கருங்கொரங்கு)

படத்தின் கிளைமாக்ஸ் இல் வில்லனை என் முட்டாள் தனத்தால் வென்று, பெரிய முட்டாளாக நான் பில்ட் -அப்  தரும் போது , உலக தலை சிறந்த முட்டாள் நான் விருது  பெறுகிறேன்   !  
இந்த படத்தின் மீதி கதையை தியேட்டர்ல பாருங்கள் !...........